
நடமாடும் சேவைகள் அமைச்சுகள், திணைக்களங்கள், பிரதேச செயலகம்கள், நலன்புரிச்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் எமது திணைக்களத்தால் நடாத்தப்படும். தமது தேவையை ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கவும். தேவையின் முக்கியத்துவத்திற்கு அமைய நடமாடும் சேவை நடாத்தப்படும்.
நடமாடும் சேவை மூலம் கிடைக்கும் நன்மைகள்
• ஒரே இடத்தில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கல்.
• ஏதேனும் பிரச்சினைகள் உள்ள விண்ணப்பதாரிகளுக்கு திணைக்கள ஊழியர்கள் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
• ஏதேனும் தாமதம் இருப்பின் அதற்கு தீர்வு காணப்படும்.
• மக்களையும் கிராம உத்தியோகத்தரையும் அறிவூட்டல்.
நடமாடும் சேவையில் பங்கு கொள்ளும் உத்தியோகத்தர்கள்
* பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
* அப் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்
* பொலிஸ் உத்தியோகத்தர்கள் (ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் 07 ஆம் விண்ணப்பத்திற்கான பொலிஸ் அறிக்கை பெறுவதற்காக )
* சமாதான நீதவான்
* மேலதிக பதிவாளர் ( பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக )